இந்திய தேசிய கீதம் – ஜன கண மன பாடல் வரிகள் | National antham in tamil

National antham in tamil : இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன பாடல் நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இப்பாடல் 1912ல் தாகூரின் தத்துவ போதினி என்ற பத்திரிக்கையில் பாரத விதாதா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
இந்திய அரசியல் நிர்ணய சபை 1950 ஜனவரி 24 அன்று இரவீந்திரநாத் தாகூரின் (ஜன கண மண) இந்தப் பாடலை நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டது. 27 டிசம்பர் 191-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது.
National antham in tamil – ஜன கண மண
ஜன கண மண அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஐலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே
– மகாகவி இரவீந்திரநாத தாகூர்
Indian national anthem lyrics English
National Anthem lyrics English of the song are as follows:
Jana-gana-mana-adhinayaka, jaya he
Bharata-bhagya-vidhata.
Punjab-Sindh-Gujarat-Maratha
Dravida-Utkala-Banga
Vindhya-Himachala-Yamuna-Ganga
Uchchala-Jaladhi-taranga.
Tava shubha name jage,
Tava shubha asisa mage,
Gahe tava jaya gatha,
Jana-gana-mangala-dayaka jaya he
Bharata-bhagya-vidhata.
Jaya he, jaya he, jaya he, Jaya jaya jaya, jaya he
Read also: குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம்?
இந்திய தேசிய கீதம் தமிழாக்கம்-National anthem lyrics in tamil

- இந்திய தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற அனைவருடைய மனத்திலும் ஆட்சி செய்கின்றாய்.
- உன் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கின்றது.
- உன் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கின்றது. யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகின்றது.
- அவை நின்னருளை வேண்டுகின்றது. உன் புகழை பரப்புகின்றது.
- இந்தியாவின் இன்ப துன்பங்களை கணிக்கின்ற தாயே.
- உனக்குவெற்றி! வெற்றி! வெற்றி!
Read also: மகாத்மா காந்தியும், இந்திய சுதந்திர போராட்டமும்
இந்திய தேசிய கீதம் வரலாறு – History of National antham in tamil

- 27 டிசம்பர் 1911-ஆம் ஆண்டு முதன்முதலாக கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டின் போது இப் பாடல் பாடப்பட்டது. இரவீந்திரநாத் தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இப் பாடலைப் பாடினார்.
- 24 சனவரி 1950 ஆம் ஆண்டு தான் “சன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும், வந்தேமாதரம் தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.
- இந்தியாவில் அணைத்து விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் இப்போதும் உள்ளது.
இந்திய தேசிய கீதம் | இந்தியா |
இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர் |
இயற்றிய ஆண்டு | ஜனவரி 24, 1950 |
இந்திய தேசிய கீதம் பாடும் முறை – National antham in tamil

- இந்திய தேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. நாம் தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.
- ஜன கண மன (Jana Gana Mana) இந்திய நாட்டுப்பண்வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
Read also: சுதந்திர இந்தியா 2022 ஒரு பார்வை
To Join => Whatsapp
To Join => Facebook
To Join => Telegram