National Pension Scheme And Benefits
Introduction
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) என்பது இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும், இது அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் ஓய்வுக்குப் பின் நிலையான வருமானத்தை வழங்குகிறது. இது 60 வயது வரைக்கும் டெபாசிட் செய்து வர வேண்டும்.
60 வயது முடிந்த பிறகு டெபாசிட் செய்த தொகையும் வட்டியும் சேர்த்து ஒரு பெரிய தொகை வரும். அந்த தொகையிலிருந்து 60% தொகையை LUMP SUM-ஆக எடுத்துக்கொள்ளலாம். மீதி உள்ள 40% தொகையை இன்வெஸ்ட்மென்டில் வைத்து அதிலிருந்து மாதம் மாதம் பென்ஷன் பெறலாம்.
இந்த பென்ஷன் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். நமது வாழ்நாள் முடிந்த பிறகு நாம் யாரை NOMINEE-ஆக நியமித்த நபருக்கு கிடைக்கும். National Pension Scheme மற்றும் National Pension Scheme Benefits என்னனென்ன என்று முழு தகவல்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
PFRDA (Pension Fund Regulatory and Development Authority) இந்தியாவில் உள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்களையும் அவற்றின் (POP) இருப்புப் புள்ளிகளில் ஒன்றாகச் செயல்பட அங்கீகரித்துள்ளது. அஞ்சல் அலுவலகங்கள் NPS (தேசிய ஓய்வூதியத் திட்டம்)க்கான ஆஃப்லைன் முதலீட்டு செயல்முறையை வழங்குகின்றன.
அருகிலுள்ள தலைமை தபால் நிலையத்திற்குச் சென்று அதற்கான ஆவணங்களை நிரப்பினால் போதும்.இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களால் வழங்கப்படும் பொது ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது, மேலும் இது முற்றிலும் நம்பகமான அரசாங்கத் திட்டமாகும்.
தபால் அலுவலகத்தில் நீண்ட காலமாக இந்திய கட்டமைப்பின் ஒரு தவிர்க்கமுடியாத மற்றும் நம்பகமான பகுதியாக இருந்து வருகிறது, இதனால் இந்தியாவில் வசிப்பவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் வளங்களைச் சேர்க்க இது அனுமதிக்கிறது.
NPS அதன் ஒப்புதல் அளிப்பவர்களின் கடமைகளை வெவ்வேறு சந்தையுடன் இணைக்கப்பட்ட கருவிகளில் வைக்கிறது, எடுத்துக்காட்டாக, மதிப்புகள் மற்றும் கடமைகள் மற்றும் கடைசி நன்மைகளின் தொகை இந்த முயற்சிகளின் கண்காட்சியில் தங்கியுள்ளது. இது 12% முதல் 14% வரையிலான கடன் செலவுகளைக் கொண்டுள்ளது.
இது முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டது. அதன் பின் இந்திய மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழில்முனைவோர்கள் யார் வேண்டுமானாலும் பயன்பெறலாம். நீங்கள் வேலை செய்யத்தவர்களாக இருந்தாலும் கூட ஏதாவதொரு வருமானம் இருக்கும் வகையில் பயன்பெறலாம்.
Benefits Of National Pension Scheme
- இது அரசு திட்டம் என்பதால் நிதி இழக்கும் பயம் இல்லை. பாதுகாப்பானதும் கூட.
- மற்ற சேமிப்பு திட்டங்களை ஒப்பிடும் போது இதில் அதிக வரி சலுகைகள் அதிகமாக உள்ளது.
- 60 வயதிற்குப் பிறகு, ஒரு பெரிய LUMP SUM தொகையும் வரும் அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களை போல ஓய்விற்கு பிறகு மாதம் மாதம் வாழ்நாள் முழுவதும் யாரையும் சார்ந்து இல்லாமல் ஓய்வூதியம் பெறலாம்.
Eligibility for National Pension Scheme
- 18-60 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்திய குடிமக்களும் National Pension Scheme கணக்கைத் திறக்கலாம். NPS ஆனது இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. NPS 60 வயதில் உருவாகிறது, இருப்பினும் 70 வயது வரை நீட்டிக்கப்படலாம்.
- அணைத்து இந்திய குடிமக்களும் இந்த கணக்கை தொடங்க முடியும்.
- NRI(Non-Resident Of India)-கூட இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
- ஆனால் HUF – அவர்கள் மட்டும் இத்திட்டத்தில் சேர முடியாது.
- ஒருவர் ஒரு கணக்கை மட்டும் திறக்க முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட கணக்கை திறக்க இயலாது.
How to open Post Office National Pension Scheme?
- கணக்கை திறப்பதற்கு முன் NSDL-இணையதளத்தில் POP-SP(Point Of Presence-Service Provider) கணக்கை திறந்து நமக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் தபால் அலுலகங்களில் திறக்கமுடியும் என்பதை அறிந்து கணக்கை திறந்து கொள்ளலாம்.
- கணக்கை திறந்த பிறகு PRAN CARD (Permanent Retirement Account Number) தருவார்கள், இது ஒரு 12 இலக்க எண் . இந்த என்னை வைத்து நாம் எப்போ வேண்டுமானாலும் ஆன்லைனில் நமது கணக்கு தொடர்பான தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.
Document Requirement For National Pension Scheme
- ஆதார் கார்டு(AADHAAR CARD)
- பான் கார்டு (PAN CARD)
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(PASSPORT SIZE PHOTO)
- பேங்க் பாஸ் புக்(BANK PASS BOOK)
- ரத்து செய்யப்பட்ட காசோலை(CANCELLED CHEQUE LEAF).
- குறைந்தபட்ச வைப்புத்தொகை Rs.500 உடன் விண்ணப்பப் படிவம்.
Types of National Pension Scheme
TIER I (Pension Account)
- TIER I எனப்து பென்ஷனுக்கானது ஆகும்.
- நமக்கு TIER I மட்டும் வேண்டுமென்றால் கணக்கை திறந்து தொகையை டெபாசிட் செய்து பென்ஷன் பெறலாம்.
- அதாவது TIER I திறப்பது என்பது கட்டாயமாகும் .
- கணக்கு திறக்கும் போது குறைந்தபட்ச வைப்புத் தொகை Rs. 500 செலுத்தியிருக்க வேண்டும்.
- 1 நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1000 செலுத்தியிருக்க வேண்டும். இவை சேவைக் கட்டணங்கள் மற்றும் வரிகளைத் தவிர ஆகும் தொகையாகும்.
- ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச 1 முறையாவது டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வரம்பு இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.
- இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகை Rs.1000 டெபாசிட் செய்யப்படாவிட்டால், உங்கள் கணக்கு முடக்கப்படும்.
- இதை புதுப்பிக்க, நீங்கள் Rs. 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
- இதில் டெபாசிட் செய்த தொகையை மொத்தமாக எடுக்கமுடியாது, கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தியாவசிய தேவைகளான வீடு வாங்குதல், இளைஞர்களின் பள்ளிப்படிப்பு அல்லது பெரிய நோய் போன்ற வெளிப்படையான நோக்கங்களுக்காக, மூன்று வருட பதிவுத் தொடக்கத்தைத் தொடர்ந்து, உங்கள் பொறுப்புகளில் 25% வரை மட்டுமே பெற முடியும்.
- TIER I-க்கு வரி பலன் உண்டு.
- TIER I எனப்து இன்வெஸ்ட்மெண்டுக்கானது ஆகும்.
- இதை தனியாக திறக்க இயலாது TIER I-ஐ திறந்த பிறகு மட்டுமே திறக்கமுடியும்.
- TIER II என்பது விருப்பத்திற்கேற்றது. அதாவது இன்வெஸ்ட்மெண்டிற்கு தேவைப்பட்டால் திறக்கலாம்.
- கணக்கு தொடங்கும் போது குறைந்தபட்ச வைப்புத்தொகை Rs. 1000 செலுத்தியிருக்க வேண்டும்.
- அடுத்த பங்களிப்பு Rs. 250 ரூபாயில் இருந்து தொடங்கலாம்.
- ஒரு நிதியாண்டில் அதிகபட்ச பங்களிப்பு ஏதும் தேவைகள் இல்லை.
- TIER II-க்கு வரிச் சலுகை ஏதும் இல்லை.
- எந்த நேரத்திலும் தொகையை திரும்பப் பெறலாம்.
Nominee Facility for NPS
- கணக்கு திறக்கும் போது சந்தாதாரர் நாமினியை கட்டாயமாக பரிந்துரைக்க வேண்டும்.
- அதிகபட்சம் 3 நாமினியை சேர்க்கலாம். அதற்கு மேல் அனுமதிக்க இயலாது.
- 1-க்கும் மேற்பட்ட நாமினிகளுக்கு அவர்களுக்கான பங்கு % சதவீதம் குறிப்பிடப்பட வேண்டும்.
- பரிந்துரைக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களாகவோ இருக்கலாம்.
Withdrawal
- தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்த தொகையிலிருந்து 60% மொத்தமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
- மீதமுள்ள 40%-லிருந்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
- மொத்த வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஓய்வூதியம் இல்லாமல் 100% திரும்பப் பெறலாம்.
Premature Withdrawal
- தேசிய ஓய்வூதியமானது கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கிறது.
- தொகையில் 20% மட்டுமே திரும்பப் பெற முடியும், மீதமுள்ள தொகையை 60 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
- திரட்டப்பட்ட மொத்தத் தொகை 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் 100% தொகையை ஓய்வூதியம் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
- சந்தாதாரர் அரசு ஊழியர் நியமனம் ஓய்வூதியம் பெற முடியும் என்றால் பரிந்துரைக்கப்படவில்லை என்றால் மொத்தத் தொகையையும் திரும்பப் பெறலாம் அல்லது KYC ஆவணத்துடன் அந்தத் தொகையைத் தொடர விருப்பம் மற்றும் விருப்பம் உள்ளது.
- சந்தாதாரர் ஓய்வூதியம் பெற்று இறந்து விட்டால், ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 40% நாமினி பெறலாம்.
Taxation
- NPS-க்காக செய்யப்படும் முதலீடு, 80C இன் கீழ், ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறத் தகுதியுடையது.
- இதைத் தவிர, 80CCD(1) இன் கீழ் ஆண்டுக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு பெற இது தகுதியானது.